கோவில்பட்டி அருகே புதிதாக கட்டப்பட்ட வாறுகாலை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்.
கோவில்பட்டி அருகே சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட வாறுகாலை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பாண்டரமங்கலம் ஊராட்சிக்கு உள்பட்ட அன்னை தெரசா நகர் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நீதியிலிருந்து ரூபாய் 15 லட்சத்தி 42 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட வாறுகளை முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டின் திட்டத்தின் கீழ் 25 நபருக்கு மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டை வழங்கினார். நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிசாமி, ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், நகர மன்ற உறுப்பினர்கள் கவியரசன், வள்ளியம்மாள் மாரியப்பன், முன்னாள் ஒன்றிய செயலாளர் போடுசாமி,மேல ஈரால் கிளைச் செயலாளர் பொன்ராஜ், விவசாய அணி ஒன்றிய செயலாளர் விஜயகுமார், உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மனோகரன், கோபி, முருகன், பழனி குமார்,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை