Header Ads

  • சற்று முன்

    இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது அதிகரிப்பு

    நாடாளுமன்றத்தில் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது பற்றி நான் எழுப்பியிருந்த  கேள்விக்கு (எண் 632/ 09.12. 2022) ஒன்றிய வெளியுறவு இணை அமைச்சர் முரளிதரன் பதில் அளித்துள்ளார். 

    சு. வெங்கடேசன் எம்.பி கேள்விக்கு வெளியுறவு இணை அமைச்சர் பதில்

    அமைச்சர் அளித்துள்ள பதிலில் தமிழக மீனவர்கள் 2019 இல் 190 பேர், 2020 இல் 74 பேர், 2021 இல் 143 பேர், 2022 இல் 219 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், அவர்களில் 21 பேர் இன்னும் சிறைகளில் இருக்கிறார்கள் என்றும், கைப்பற்றப்பட்ட படகுகள் 2019 இல் 39, 2020 இல் 11, 2021 இல் 19, 2022 இல் 30 என்றும் அவற்றில் மீண்டும் திரும்ப மீட்கப்பட்ட படகுகள் 2019 இல் 1, 2020 இல் 1, 2021 இல் 4, 2022 இல் 0 என்றும் தகவல்களை தந்துள்ளார். 

    அரசு முறை நடவடிக்கைகள்

    இந்திய தூதரகம் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்களின் நலன், சட்ட உதவி செய்து வருவதாகவும், இப்பிரச்சினை குறித்து பிரதமர்கள் மட்டத்தில் இணைய வழியில் செப்டம்பர் 2020, இந்திய வெளியுறவு அமைச்சர் மற்றும் இலங்கை மீன் வள அமைச்சர் மட்டத்தில் ஜூன் 2021, மார்ச் 2022 லிலும், இந்திய வெளியுறவு அமைச்சர் மற்றும் இலங்கை நிதி அமைச்சர் மட்டத்தில் இணைய வழியில் ஜனவரி 2022 லிழும் விவாதிக்கப்பட்டுள்ளது என்றும், 2016 இல் 2 + 2 (இரண்டு நாடுகளின் வெளியுறவு, மீன் வள அமைச்சர்கள்) சந்திப்பில் உருவாக்கப்பட்ட கூட்டு செயல் குழு மார்ச் 2022 இல் ஐந்தாவது முறையாக கூடி விரிவாக விவாதித்துள்ளது என்றும் அமைச்சர் பதிலில் தெரிவித்துள்ளார். 

    சு. வெங்கடேசன் கருத்து

    "அரசு முயற்சிகளை எடுப்பதாக கூறினாலும் இலங்கை கடற்படையின் அத்து மீறல்களும், கைதுகளும் அதிகரித்து வருவதையே அமைச்சரின் பதிலில் உள்ள விவரங்கள் சொல்கின்றன. 2019 இல் 190 கைதுகள் என்பது கோவிட் காலத்தில் மட்டும் சற்று குறைந்தாலும் 2022 இல் இதுவரை 219 என்ற அளவிற்கு உயர்ந்திருக்கிறது. நான்கு ஆண்டுகளில் 626 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  99 படகுகள் கைப்பற்றப்பட்டதில் 93 படகுகள் மீடகப்படவில்லை. ஆகவே அரசு முறை முயற்சிகள் இன்னும் தீவிரமாக்கப்பட வேண்டும். இன்னும் சிறையில் இருக்கிற 21 பேர் தமிழக மீனவர்கள் உடன் விடுதலை செய்யப்பட நடவடிக்கைகள் வேண்டும்." என்று சு. வெங்கடேசன் எம். பி கூறியுள்ளார்.

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad