Header Ads

  • சற்று முன்

    விருதுநகர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திடீர் மரணம்



    சிவகாசி : விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள வடபட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (66). அதிமுக கட்சியில் தீவிரமாக பணியாற்றிய ராதாகிருஷ்ணன், கடந்த 2014 - 2019 நாடாளுமன்றத்தில், விருதுநகர் தொகுதியில் வெற்றி பெற்றார். முன்னதாக சிவகாசி யூனியன் தலைவராக 3 முறை  இவர் பதவி வகித்துள்ளார். தற்போது விருதுநகர் மேற்கு மாவட்ட துணைச் செயலாளராக இருந்து வந்தார். இவருக்கு 2 மனைவிகள், 1 மகன், 3 மகள்கள் உள்ளனர். அதிமுக கட்சியில் ஏற்பட்டுள்ள பிரிவின் காரணமாக தீவிர அரசியலில் ஈடுபடாமல் சற்று ஒதுங்கியிருந்தார். தற்போது அதிமுக இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக இருந்து வந்தார். வயது முதிர்வின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த ராதாகிருஷ்ணன், வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு அவரது உடல்நிலை மிகவும் மோசமானதையடுத்து சிவகாசி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது இறப்பு செய்தியைக் கேட்ட முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி விரைந்து சென்று அவரது உடலுக்கு மாலையணிவித்து மரியாதை செய்தார். வடபட்டியில் உள்ள ராதாகிருஷ்ணனின் சொந்த வீட்டில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. ஏராளமான அதிமுக கட்சி நிர்வாகிகள், ராதாகிருஷ்ணனின் உடலுக்கு இறுதி மரியாதை செய்து வருகின்றனர். இன்று மாலை அவரது உடல் வடபட்டியில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்படுகிறது. 
    முன்னாள் எம்.பி. ராதாகிருஷ்ணன் மறைவு அதிமுக கட்சியினரிடம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    செய்தியாளர் வி காளமேகம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad