Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டி அருகே 13 வயது சிறுமி மின்சாரம் தாக்கி பலி

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் உள்ள அரியநாயகிபுரம் கிராமத்தை சேர்ந்த சையது இப்ராஹிம் என்பவரின் மகள் ஆயிஷா ஷிபாயா என்ற 13 வயது சிறுமி அங்குள்ள அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்று வருகிறார் அவர்  தனது வீட்டில் வெந்நீர் வைப்பதற்காக வாட்டர் ஹீட்டரின் வயரினை ஸ்விட்ச் போர்டில் மாட்டியபோது எதிர்பாராத விதமாக சிறுமியின் மீது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டதில் அருகில் இருந்த கதவில் சிறுமியின் பின்பக்க தலை இடித்து காயம் ஏற்பட்டதில் சிறுமி ஆயிஷா ஷிபாயா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

    இதனைத்தொடர்ந்து  தகவல் அறிந்த விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுமி உயிரிழந்த இடத்தை பார்வையிட்டு, சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், 13 வயது சிறுமி ஆயிஷா ஷிபாயா மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad