புதிய மோட்டார் வாகன சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி வேலூர் மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கம் சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
வேலூர்மாவட்டம் ,வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் மத்திய அரசு புதிய மோட்டார் வாகன சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் , தமிழக அரசு மோட்டார் வாகன சட்டத்தை அமுல்படுத்தியதை திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தி வேலூர் மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கம் சிஐடியு சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சங்கம் மாவட்ட தலைவர் கே.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது . சங்க மாவட்ட பொதுச்செயலாளர் டி. முரளி துவக்க உரையாற்றினார். இதில் மாவட்ட பொதுச்செயலாளர் எஸ் .பரசுராமன் ,சி ஐ டி மாவட்ட துணை செயலாளர் எம் .காசி, சங்க மாவட்ட பொருளாளர் எம். ராமு, மற்றும் வேலூர் மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கம் சிஐடியு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்ட செய்தியாளர் : S. சுதாகர்
கருத்துகள் இல்லை