Header Ads

  • சற்று முன்

    சிவகாசி அருகே, பேராசிரியர்கள் வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகை கொள்ளை

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள ரிசர்வ்லயன், லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தீபன் (46). இவரது மனைவி பிரியா (40). கணவன், மனைவி இருவரும் வேவ்வேறு கல்லூரிகளில் பேராசிரியர்களாக வேலை பார்த்து வருகின்றனர். நேற்று இவர்கள் இருவரும் வழக்கம் போல கல்லூரிக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து கார்த்தீபன் அதிர்ச்சியடைந்தார். வீட்டில் இருந்த பிரோவில் வைக்கப்பட்டிருந்த உடைகள் மற்றும் பொருட்கள் சிதறிக் கிடந்தன. பீரோவில் வைத்திருந்த 8 பவுன் தங்க நகைகள் கொள்ளை போயிருந்தது. 

    இது குறித்து கார்த்தீபன், திருத்தங்கல் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, பொருட்களில் இருந்த கைரேகைகள் மற்றும் தடயங்கள் சேகரிக்கப்பட்டது. கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செய்தியாளர் வி காளமேகம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad