மதுரையில் பெண் வழக்கறிஞர் தூக்கிட்டு தற்கொலை; போலீசார் விசாரணை
மதுரை எஸ் எஸ் காலனி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டிஎஸ்பி நகர் பகுதியில் சேர்ந்த கூலி தொழிலாளியான முத்துகணேசன் என்பவரது மகள் குமுதா (வயது 24) வழக்கறிஞராக பணியாற்றி வருகின்ற நிலையில் இன்று மாலை திடீரென வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் சம்பவம் குறித்து மதுரை எஸ் எஸ் காலனி காவல்நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டதை போலீசார் குமுதாவில் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து பெண் வழக்கறிஞர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
கருத்துகள் இல்லை