Header Ads

  • சற்று முன்

    திருவில்லிபுத்தூரில், உரம் விற்பனைக் கடையின் கதவை உடைத்து பணம் திருட்டு

    திருவில்லிபுத்தூர் : விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் நம்பிநாயுடு தெரு பகுதியைச் சேர்ந்தவர் முத்துச்சாமி (52). இவர் மடவார் வளாகம் பகுதியில் உரம் விற்பனை செய்யும் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். நேற்று வழக்கம் போல கடையை திறப்பதற்காக முத்துச்சாமி சென்றபோது, கடையின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். கடையில் இருந்த மேஜையின் பூட்டு உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 30 ஆயிரம் ரூபாய் பணம் திருடு போனதைக் கண்டு மேலும் அதிர்ச்சியடைந்தார். இது குறித்து முத்துச்சாமி, திருவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செய்தியாளர் வி காளமேகம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad