நன்னடத்தை பிணைய பத்திரத்தை மீறிகஞ்சா விற்பனை செய்தவர் கைது. செய்து சிறையில் அடைப்பு.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில், தொடர்ந்து குற்ற வழக்குகளில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பொருட்டு பேரூர் உட்கோட்டம் தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் கஞ்சா வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளியான விஜய்(26) என்பவருக்கு கடந்த 15.09.2022-ம் தேதி முதல் ஒரு வருடத்திற்கு பேரூர் நிர்வாக துறை நடுவர் அவர்கள் நன்னடத்தை பிணைய பத்திரம் நிலுவையில் உள்ள நிலையில், மேற்கண்ட நபர் பிணைய பத்திரத்தை மீறி கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதால், அந்நபரை காவல் ஆய்வாளர் லெனின் அப்பாதுரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளார். (08.11.2022) அந்நபரை பேரூர் நிர்வாகத் துறை நடுவர் முன் ஆஜர்படுத்தி பிணைய பத்திரத்தை மீறிய குற்றத்திற்காக, இன்று (22.11.2022) முதல் பிணைய பத்திரத்தில் மீதம் உள்ள 297 நாட்கள் சிறையில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து விஜய்(26) கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
கருத்துகள் இல்லை