Header Ads

  • சற்று முன்

    சாத்தூரில், சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமதாஸ் (43). கூலி வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு ஜுலை மாதம், அதே பகுதியைச் சேர்ந்த 3 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து சிறுவனின் பெற்றோர் சாத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். வழக்குபதிவு செய்த போலீசார், ராமதாஸை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். சம்பவம் குறித்த வழக்கு திருவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பூரண ஜெயஆனந்த், குற்றவாளி ராமதாசுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

    செய்தியாளர் வி காளமேகம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad