Header Ads

  • சற்று முன்

    ஆசிய பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பின் முப்பெரும் விழா

    AJF மீடியா & பேஷன் இன்ஸ்டிடியூட் துவக்க விழாவும் , சித்திரை பூக்கள் தமிழ் மாத இதழின் 31 ஆம் ஆண்டின் துவக்க விழாவும், சித்திரை பூக்கள் ஆசிரியரின் 50ஆண்டின் பொன்விழா என முப்பெரு விழாவாக சென்னை பாரதியார் இல்லத்தில் 20.10.2022 அன்று காலை 11.00 மணியளவில் நடைபெற்றது. 

    இந்நிகழ்ச்சியில் மையலை த. வேலு மையிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் சிறப்பிதழை வெளியிட மூத்த பத்திரிகையாளர்  திரு.R. நூருல்லா பெற்றுக் கொண்டார். இதனை தொடர்ந்து சிறப்பு தபால்தலை கராத்தே தியாகராஜன்   வெளியிட திரைப்பட தயாரிப்பாளர் திரு.K. சங்கர் பெற்றுக்கொண்டார். AJF  & பேஷன் இன்ஸ்டியூட் பெயர் பலகையை திறந்து வைத்தார். 

    தமிழ் நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பில் மாநிலத் தலைவர் இளசை கணேசன், குத்து விளக்கேற்றி வாழ்த்து தெரிவித்தார். மேலும் தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு கூட்டமைப்பின் பொது செயலாளர் கா. குரு அவர்கள் விழா நாயகனுக்கு நினைவு பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார். துணைத் தலைவர்கள் டாக்டர். K. ஜெகதீசன், கேப்டன் நாகராஜன்  D.M. தர்மராஜா, இணை செயலாளர் தமிழன் வடிவேலு, பொருளாளர் பாரதி கன்னையா மற்றும் திரளான பத்திரிகையாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அணைவருக்கும் விழா குழுவின் சார்பில் பொன்னாடையும் நினைவு பரிசும் வழங்கினர்.    

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad