Header Ads

  • சற்று முன்

    மதுரை தென்கால் கண்மாயில் காக்கையின் முட்டைகளை எடுக்கச் சென்ற நபர் நீரில் மூழ்கி பலி., உடலைப் கைபற்றி போலீசார் விசாரணை.

    மதுரை திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட பசுமலை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் என்பவரது மகன் சூரியகுமார்.,  இவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இன்று மதியம் தனது நண்பர்களுடன் திருப்பரங்குன்றம் பகுதியில் அமைந்துள்ள தென்கால் கண்மாயில் குளிக்க செல்லும் பொழுது நீர் காக்கையின் முட்டைகளை எடுப்பதற்காக கண்மாயில் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார். 

    ஆழமான பகுதிக்கு சூரியகுமார் சென்றதால் மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் அவருடன் வந்த நண்பர்கள் காவல் நிலையத்திற்கு அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மதுரை டவுன்  தீயணைப்புத் துறையினர் மோட்டார் வாகன நிலைய அலுவலர் கண்ணன் தலைமையிலான தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் உதவியுடன் கண்மாயின் நடுவே மிதந்த சூரிய குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த திருப்பரங்குன்றம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad