திருப்பரங்குன்றம் அருகே திருநகரில் வழக்கறிஞர் வீட்டில் இரண்டு லேப்டாப் மற்றும் வாட்சுகள் உள்பட ரூபாய் 2 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு.
மதுரை திருப்பரங்குன்றம் அருகே திருநகர் 5வது பஸ் நிறுத்தம் அருகே மந்திதோப்பு பகுதியை சேர்ந்தவர் செந்தில்வேல். இவர் தனது மனைவி லெஷ்மி (வயது 53) , மகன் விஷ்ணுகாந்த் (வயது 26) உடன் வசித்து வருகிறார். விஷ்ணுகாந்த் வழக்கறிஞராக பணிபுரிவதால் நேற்று இரவு லேப்டாப்பில் வழக்குகள் குறித்து விவரங்களை பதிவு செய்து கொண்டிருந்தார். இரவு விஷ்ணுகாந்தன் மற்றும் அவர்கள் தாயார் லட்சுமி ஆகிருவரும் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தனர். அவரது தந்தை செந்தில்வேல் நேற்று பகல் வெளியூர் சென்றிருந்து இன்று அதிகாலை செந்தில்வேல் வீட்டுக்கு திரும்பும் போது வீட்டின் கதவு திறந்திருப்பதை கண்டு கேட்டதும்.
விஷ்ணுகாந்த் வீட்டில் உள்ள பொருட்களை தேடிய போது இரண்டு லேப்டாப் மற்றும் விலை உயர்ந்த வாட்ச் இரண்டு ஆகியவை காணவில்லை. இதன் மதிப்பு 2 லட்சத்து 40 ஆயிரம் ஆகும்.
இது குறித்து விஷ்ணுகாந்தன் கொடுத்த புகாரின் பேரில் திருநகர் SI மணிராஜ் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
கருத்துகள் இல்லை