Header Ads

  • சற்று முன்

    எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க முடிவு பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்

    பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க முடிவு செய்துள்ளன. அதிக பணவீக்கம், உக்ரைன் விவகாரம் உள்ளிட்ட சர்வதேச பிரச்சினைகளால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் பொருளாதார மந்த நிலை ஏற்படலாம் என்ற அச்சம் காரணமாக கச்சா எண்ணெய் வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது.

    இதனால் எண்ணெய் விலையை அதிகரிக்கும் நோக்கில் பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க முடிவு செய்துள்ளன. இந்த நாடுகளின் மந்திரிகள் வியன்னாவில் கூடி இந்த முடிவை எடுத்து உள்ளன. அதன்படி நாெளான்றுக்கு 20 லட்சம் பீப்பாய் அளவுக்கு உற்பத்தியை குறைக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த நடவடிக்கை நவம்பர் முதல் அமலுக்கு வருவதாக அந்த நாடுகள் அறிவித்து உள்ளன.

    உலக பொருளாதாரம் மற்றும் எண்ணெய் சந்தை கண்ணோட்டங்களை சுற்றியுள்ள நிச்சயமற்ற தன்மையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாகவும் கூறியுள்ளன. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க முடிவு செய்திருப்பதால், சர்வதேச அளவில் பெட்ரோல்-டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad