Header Ads

  • சற்று முன்

    இந்தியாவில் இருக்க கூடிய எல்லோரும் கற்றுக் கொள்ளக் கூடிய மொழியாக தமிழ் உள்ளது என கோவில்பட்டி அருகே கனிமொழி எம்பி பேச்சு

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் உள்ள வைப்பாற்று ஆற்றுப் படுகையில் உள்ள சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டு 25 இலட்சம் பன விதைகள் நடவு செய்யும் பணியில் துவக்க விழா நடைபெற்றது. இதில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான திருமிகு.கனிமொழி  கலந்துகொண்டு பன விதைகள் நடவு செய்யும் பணிகளை தொடங்கி வைத்து, 

    அதன்பின் நடைபெற்ற  விழாவில்  பேசுகையில் : தமிழகத்தின் வனப் பரப்பினை 23.8 சதவீதத்தில் இருந்து 33 சதவீதமாக  உருவாக்கி காட்ட வேண்டும் உறுதியோடு தமிழக முதல்வர் மு க. ஸ்டாலின் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். மக்கள் பிரதிநிதிகள் அவருக்கு உறுதுணையாக இருந்தால் 33% ஏன் அதைவிட அதிகமாக உருவாக்க முடியும். மகளிர்க்கு  33 சதவீதம் இட ஒதுக்கீடு வேண்டும் என்பதற்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம். அதுதான் கிடைக்கவில்லை. உள்ளாட்சியில் 50% மகளிருக்கு இட ஒதுக்கீடு கிடைத்துவிட்டது  33 %  விட்டுவிட்டு 50% வனப்பரப்பினை உயர்த்த பாடுபடுவோம்  முதல்வரின் கனவை நிறைவேற்றும் ‌ வகையில் தூத்துக்குடி மாவட்டத்தை முன் உதாரணமாக உருவாக்க முடியும்.  இங்கு சட்டமன்ற உறுப்பினர் பேசுகிறியில் ஆக்கக்கூடிய கடவுள் பிரம்மன், காக்கக்கூடிய கடவுள் விஷ்ணு, அழிக்கக்கூடிய கடவுள் சிவன் என்று கூறுவார்கள்.‌ ஆக்கக்கூடிய கடவுளை விட  பாதுகாக்கக்கூடிய விஷ்ணுவுக்குத்தான் மரியாதை அதிகம் என்றார் ஆனால் தமிழகத்தைப் பொறுத்தவரை அரியும் சிவனும் ஒன்று நம்பக்கூடிய பெரும்பான்மையான மக்கள் இங்கு உள்ளனர்

    அந்த வகையில் அழிக்கக் கூடியவர்களையும் நாம் அழித்து விடக்கூடாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மரங்களை ,சுற்றுப்புறச் சூழலை அழிக்கக் கூடியவர்கள் நிறைய பேர் உள்ளனர் அதேபோன்று இங்கு  இருக்கக்கூடிய மத நல்லிணக்கத்தை , மக்களின் ஒற்றுமையை அழிப்பதற்கும் நிறைய பேர் இருக்கின்றனர் அழிக்கக்கூடிய சக்திகளில் எல்லாம் நாம் விட்டு விடக்கூடாது என்பதை உறுதியோடு புரிந்து கொள்ள வேண்டும்

    மக்களை ஒற்றுமைப்படுத்தக்கூடிய இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். குழந்தைகளுக்கு வீடு, இடம் வாங்குவதை விட ஒரு மரத்தை விட்டுச் சென்றால் மண்ணும் வீடும்  பத்திரமாக இருக்கும்.

    முன்பு எப்போது மழை பெய்யும் வெயில் அடிக்கும் என்று கூறி விட முடியும் ஆனால் தற்போது அந்த நிலை இல்லை. நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ள கூடுதல் ஆட்சியர்  ரெம்ப அழகாக தமிழ் பேசுகிறார். தமிழைக் கற்றுக் கொள்வதில் கஷ்டம் இல்லை, இந்தியாவில் இருக்க கூடிய  எல்லோரும் கற்றுக் கொள்ளக் கூடிய மொழியாக  தான் தமிழ் உள்ளது. அவங்க தமிழ் பேசட்டும், நம்ம அதற்கு அப்புறம் யோசிக்கலாம். நாங்க மட்டும் ஒன்றை கற்றுக் கொள்ள வேண்டும். நீங்கள் உட்கார்ந்து இருப்பீர்கள் என்ற நிலை இருக்கக்கூடாது. கூடுதல் ஆட்சியரை பார்த்து அவர்களும் தமிழ் கற்றுக் கொள்ளட்டும். தமிழ் அழகான மொழி என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad