Header Ads

  • சற்று முன்

    சோழவந்தான் அருகே முள்ளிபள்ளத்தில் மாமன்னர் மருதுபாண்டியர் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை அன்னதானம் நடைபெற்றது.

    மதுரை மாவட்டம்.சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் அகமுடையார் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் மாமன்னர் மருதுபாண்டியர் அவர்களின் குருபூஜையை ஒட்டி அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.  பொது மக்களுக்கு சர்க்கரைபொங்கல், புளியோதரை உள்ளிட்ட அன்னதானம் நடைபெற்றது. இதில் முள்ளிப்பள்ளம் அகமுடையார் முன்னேற்ற சங்க தலைவர் கிருஷ்ணன்(எ) கிட்டு தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கேபிள் ராஜா, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மார்நாட்டான் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் வண்டிக்காரராசு, செயலாளர் தெய்வேந்திரன், பொருளாளர் முத்துக்குமார் ,ஜேசிபி கண்ணன் ,ஜேசிபி கார்த்தி ,மனோகரன் ரவி ,கீரைண்ணன் மற்றும் அகமுடையார் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad