சிவகாசி பகுதியில் கிராம சபை கூட்டம்... எம்எல்ஏ அசோகன் கலந்து கொண்டார்.....
விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதிகளில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது. ஆனையூர் ஊராட்சியில், சிவகாசி எம்எல்ஏ அசோகன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் யூனியன் துணை தலைவர் விவேகன்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஊராட்சி பகுதிகளில் வேளாண்மை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மற்றும் சுகாதாரத்துறை சார்பில் நடைபெறும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து அதிகாரிகள் விளக்கமளித்தனர். மக்களை தேடி மருத்துவம் சார்ந்த திட்டம் குறித்து மருத்துவர் வைரக்குமார் பேசினார். நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன், ஊராட்சி செயலர் நாகராஜன் உட்பட அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம்
கருத்துகள் இல்லை