மதுரை நாடார் மகா ஜன சங்க தேர்தல் நாடார் சமுதாய வாக்காள பெருமக்களே சிந்திப்பீர்! வாக்களிப்பீர் !
சிதறிக்கிடந்த
நாடார் சமூகத்தை ஒன்றிணைந்து செயல்பட உருவாக்கப்பட்டது நாடார் மகா ஜன சங்கம்.இச்சங்கமானது
கடந்த 115 ஆண்டுகளுக்கு முன்னர் துவங்கப்பட்டது. 20 ஆண்டுகளுக்கு மேலாக நிர்வாகத்திலிருத்து எந்தவித முன்னேற்ற வளர்ச்சிக்கு பாடுபட்டதாக தெரியவில்லை. குறிப்பாக கல்வி கூடங்கள்
திறக்கப்படவில்லை. சங்கத்தின் கல்லூரிகளை பல்கலை கழகமாகவோ உயர்த்தப்படவில்லை. மருத்துவ
கல்லூரியோ அதை சார்ந்த கல்வி நிறுவனங்களோ துவங்கப்படவில்லை.
மதுரையிலுள்ள சேர்மத்தாய்
வாசன் கல்லூரி, மதுரை விளக்குதூணில் உள்ள நாடார் மேன்ஷன் நிறுவனங்களுக்கு செயற்குழு மற்றும் பொதுக்குழு ஒப்புதல் பெறாமல் வங்கியில் கடன் பெற்றுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் பச்சையாபுரத்தில் உள்ள
தொழிற்பயிற்சி நிலையம் விருதுநகர் மாவட்டம் கள்ளிக்குடியில் உள்ள தொழிற்பயிற்சி நிலையம், மதுரை மற்றும் ரம்மநாதபுரத்திலுள்ள
தொழிற்பயிற்சி நிலையங்கள் கல்வி நிறுவனங்களும்
மூடப்பட்டுள்ளன.
முன்னோர்களால்
தொடங்கப்பட்ட கல்வி தாய் கல்வி தந்தை பட்டம் மூலம் பெறப்பட்ட நிதியை வங்கியில் டெபொசிட்
செய்து அதன் மூலம் வருகின்ற வட்டி தொகையை ஏழை
எளிய மாணவர்களுக்கு வழங்காமல் அந்த பணத்தை
முற்றிலும் கையாடல் செய்துவிட்டனர்.
சிந்திப்பீர்
! வாக்களிப்பீர் ! தேர்ந்தெடுப்பீர் !
கருத்துகள் இல்லை