திருப்பரங்குன்றம் கோவில் அருகே சூரசம்காரம் நடைபெறும் இடத்தினை மதுரை மாநகர் காவல் ஆணையாளர் |ஆய்வு மேற்கொண்டார்.
அறுபடை வீடுகளின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 25ஆம் தேதி காப்பு கட்டுகளுடன் தொடங்கியது. இந்த நிலையில் கந்த சஷ்டி திருவிழாவில் முக்கிய நாளாக வருகிற முப்பதாம் தேதி ஞாயிற்றுக்கிழமை சூரசம்காரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது இரண்டு ஆண்டுகளுக்கு கழித்து சூரசம்காரம் நிகழ்ச்சி பொதுமக்கள் அனுமதியுடன் நடைபெறுகிறது.
இந்த சூரசம்காரம் நிகழ்ச்சிக்கு அதிக அளவு மக்கள் கூட வாய்ப்பு இருப்பதால் சூரசம்காரம் நடைபெறும் இடத்திற்கு மதுரை மாநகர காவல் ஆணையாளர் செந்தில்குமார் இன்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் சூரசம்காரம் நிகழ்ச்சியில் பாதுகாப்பு பணிக்காக கூடுதல் காவல் துறையினர் பணியில் ஈடுபட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
கருத்துகள் இல்லை