Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டி அருகே சமூக வலைதளத்தில் கருத்துக்களை பதிவிட்டது தொடர்பான தகராறில் இளைஞர் கத்தியால் குத்தி கொலை -6 பேரை பிடித்து காவல்துறை விசாரணை

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கயத்தாறு வடக்கு தெருவை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் மகன் சுரேஷ். வயது 22. சமையல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் சமூக வலைதளத்தில் சில கருத்துக்களை பதிவிட்டதாகவும் இதனை மற்றொரு தரப்பு கண்டித்து தகராறில் ஈடுபட்டனராம்.இந்நிலையில் நேற்று நள்ளிரவில் வீட்டுக்கு வந்த மர்ம நபர்கள் சுரேஷின் வீட்டு கதவை தட்டினர் அப்பொழுது சுரேஷின் தாயார் ரேவதி வீட்டின் கதவைத் திறந்தவுடன் 6 பேர் கொண்ட கும்பல்  தாயாரை தள்ளிவிட்டு வீட்டுக்குள் புகுந்து அங்கு படுத்திருந்த சுரேஷ்சை சரமாரியாக குத்தி விட்டு தப்பி சென்றனர்.

    அக்கம் பக்கத்தினர் உடனடியாக சுரேஷை மீட்டு திருநெல்வேலி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு  சிகிச்சைக்காக  கொண்டு சென்றனர் கொண்டு செல்லும் வழியிலேயே சுரேஷ் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக கயத்தாறு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து திருநெல்வேலியை சேர்ந்த பந்தல்ராஜ்  உள்ளிட்ட 6 நபர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் சுரேஷுக்கும் பந்தல்ராஜ்சும்  இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் இவர்களுக்கு ஒரு சமூக வலைதள குழு ஆரம்பித்து அதில் அவர்கள் நிகழ்ச்சி தொடர்பாக சமூக சார்ந்த கருத்துக்களை அவ்வப்போது பரிமாறி வந்த நிலையில் 

    ஒரு கட்டத்தில் சமூக வலைத்தளத்தில் சுரேஷுக்கும் பந்தல்ராஜுக்கும் கருத்து மோதல் வர ஆத்திரத்தில் நேற்று இரவு பந்தல்ராஜ் மற்றும் 5 பேர் சுரேஷ் வீட்டுக்குள் புகுந்து சுரேஷ் சரமாரியாக குத்தி விட்டு தப்பி சென்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad