Header Ads

  • சற்று முன்

    மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 35 தொழிலாளர்களை பாதுகாப்பாக மீட்டு வர மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். -எம்பி. மாணிக்கம் தாகூர் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர்க்கு கடிதம்*

    விருதுநகர் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் ப.மாணிக்கம் தாகூர் அவர்கள் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது;

    அதிக வருமானத்தை எதிர்பார்த்து தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் வளைகுடா நாடுகளில் வேலை செய்கிறார்கள். அவர்களில் தொழில்நுட்ப பயிற்சியோ, கல்வி தகுதியோ இல்லாதவர்கள் ஏஜெண்டுகளை நம்பி குவைத் சென்று பல்வேறு துன்பங்களுக்கு உள்ளாகிறார்கள்.

    அவர்கள் குறிப்பிட்ட வேலைக்கு பதிலாக வேறு வேலைகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இது போல் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 35க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காலம் நேரம் பார்க்காமல் வேளையில் ஈடுபடுத்தி கொத்தடிமைகளாக நடத்தப்படுகிறார்கள். அவர்களின் பாஸ்போர்ட் அவர்கள் வேலை செய்யும் உரிமையாளர்களால் பறித்து வைக்கப்பட்டுள்ளன. உணவின்றி அடிப்படை வசதிகள் இல்லாத இடங்களில் அடைத்து வைக்கப்பட்டு கொடும் துன்பத்திற்கு உள்ளாக்கப்பட்டு இருப்பதாக அந்த தொழிலாளர்களின் குடும்பத்தினர் கண்ணீரும் கம்பலையுமாய் கூறுகின்றனர்.

    எனவே மத்திய அரசு சார்பில் தாங்கள் உடனடியாக தலையிட்டு குவைத் அரசாங்கத்துடன் தொடர்பு கொண்டு மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கொத்தடிமைகளாக உள்ள 35 தொழிலாளர்களையும் பாதுகாப்புடன் மீட்டு தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்...செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad