Header Ads

  • சற்று முன்

    தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் 2- வது மாவட்ட கோரிக்கை மாநாடு

    வேலூர் மாவட்டம் ,வேலூர் டவுன்ஹாலில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் 14 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து 2- வது மாவட்ட கோரிக்கை மாநாடு  மாவட்ட துணைத் தலைவர் எஸ் . சிவகுமார் தலைமையில் நடைபெற்றது .மாவட்ட துணைத் தலைவர் எஸ் .ஜெயலட்சுமி வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட இணைச் செயலாளர்கள் எஸ். மணி சி .ஆதிகேசவன்  சி.வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலத் தலைவர் ஆர். திருமலைவாசன் மாநில பொதுச் செயலாளர் எஸ். ரவி மாநில துணைத்தலைவர் ஆர். ரவி ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்டம் முன்னாள் தலைவர் எம். ஜெய்சங்கர் முன்னாள் மாவட்ட செயலாளர் வி. சுபாஷ்சந்திரபோஸ் முன்னாள் மாவட்ட பொருளாளர் கே .வேல்முருகன் வட்டாட்சியர் பா. செந்தில் வேலூர் மாவட்ட தலைவர் TSROA  எஸ் .எம் .முகமது சாதிக், வேலூர் மாவட்ட செயலாளர் தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கம் ஆர் .ஜீவரத்தினம் ஆகியோர் வாழ்த்துரையாற்றினார்கள் மாநில செயற்குழு உறுப்பினர் ஏ .தன்ராஜ் நன்றியுரை ஆற்றினார்.

    செய்தியாளர் : சுதாகர் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad