Header Ads

  • சற்று முன்

    சிவகாசி அருகே, இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்து கட்டிடத் தொழிலாளி உயிரிழப்பு.....

    விருதுநகர் அருகேயுள்ள வெள்ளூர் பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணிராஜ் (55). கட்டிடத் தொழிலாளியான இவர் வேலை விசயமாக, தனது இருசக்கர வாகனத்தில் சிவகாசிக்கு சென்று கொண்டிருந்தார். திருத்தங்கலில் மண்டல அலுவலகம் அருகே சென்றுகொண்டிருந்த போது, அந்தோணிராஜ் திடீரென்று வண்டியில் இருந்து கிழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை, அருகிலிருந்தவர்கள் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அந்தோணிராஜ், சிகிச்சை பலனலிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து, திருத்தங்கல் காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செய்தியாளர் வி காளமேகம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad