Header Ads

  • சற்று முன்

    நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான் வடிவேல் பட பாணியில் டீக்கடைக்காரரை தாக்கிய மூன்று பேர் கைது*

    நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான் வடிவேல் பட பாணியில் என ரோட்டில் பொதுமக்களை தாக்கி  ஓசியாக டீ, சிகரெட்  தர மறுத்த டீக்கடைக்காரரை தாக்கிய மூன்று பேர் கைது*

    மதுரை காளவாசல் பைபாஸ் சாலையில் உள்ள கல்யாணசுந்தரனார் தெருவை சேர்ந்த முருகேசன் என்பவர் சம்மட்டிபுரம்  மெயின் ரோட்டில் டீக்கடை நடத்தி வருகிறார். சம்பவதன்று கடைக்கு வந்த பெத்தானியாபுரம் மோகன் என்ற அரசு ,அச்சம்பத்துவை சேர்ந்த  தேவ குமார், சம்பட்டிபுரத்தை  சேர்ந்த பாண்டி ஆகிய முவரும் பணம் கொடுக்காமல் டீ,சிகரெட் கேட்டுள்ளனர். இதற்கு கடைக்காரர் மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த மூவரும் கடையில் இருந்த பாட்டிலை எடுத்து முருகேசனை தாக்கினர். மேலும் இவர்கள் அந்தப் பகுதியில் நடந்து சென்ற பொது மக்களை நானும் ரௌடி தான் என வடிவேல் படம் பாடியில் அனைவரையும் மிரட்டி உள்ளார் மேலும் சில நபர்களையும் தாக்கியும் உள்ளார்கள் இந்த சம்பவம் குறித்து அவர் எஸ்.எஸ். காலனி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கடைக்காரரை தாக்கிய மோகன், தேவகுமார், பாண்டி ஆகிய மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    செய்தியாளர்வி  காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad