Header Ads

  • சற்று முன்

    சிவகாசி அருகே காதலியை கண்டித்ததால், வாலிபர் தற்கொலை.....

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள மீனம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (28). இவர் சிவகாசியில் உள்ள ஒரு டீக்கடையில், டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். ராஜ்குமாரும், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல் விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரிந்ததால், அந்தப் பெண்ணை அவர்கள் கண்டித்துள்ளனர். இதனால் அந்தப் பெண் ராஜ்குமாரிடம் பேசுவதை தவிர்த்துள்ளார். இதனால் மன வேதனையடைந்த ராஜ்குமார், தனது வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த சிவகாசி கிழக்கு காவல்நிலைய போலீசார் விரைந்து சென்று, ராஜ்குமார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செய்தியாளர் வி காளமேகம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad