Header Ads

  • சற்று முன்

    மனநலம் பாதிக்கப்பட்டவரை மீட்டர் ரெட் கிராஸ் அமைப்பினர் காப்பகத்தில் சேர்த்தனர்


    மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் மனநல பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் பேருந்துகளின் இடையே குறுக்கும்  நெடுக்குமாக திரிவதால் விபத்தில் சிக்கி உயிரிழப்பு  ஏற்படும் அபாயம் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது . மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை மீட்டு காப்பகத்தில் சேர்க்குமாறு மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ்சேகர் அவர்கள்  ரெட்கிராஸ் அமைப்பினருக்கு உத்தரவிட்டார் அதனடிப்படையில் ரெட்கிராஸ் நிர்வாகிகள் ராஜ்குமார், அறிவழகன் மற்றும் செல்லமுத்து அறக்கட்டளை நிர்வாகிகள் ஜெகன், விஜயராணி ஆகியோர் நேரில் சென்று மாட்டுத்தாவணி காவல்நிலைய  காவலர்கள் உதவியுடன் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை மீட்டு மதுரை தோப்பூர் அரசு மருத்துவ மனையில் உள்ள காப்பகத்தில் சேர்த்தனர். 

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad