Header Ads

  • சற்று முன்

    மதுரை.அலங்காநல்லூர் அருகே கொடூரமான முறையில். புது மாப்பிள்ளை கொலை - போலீஸ் விசாரணை தொடரும் கொலைகளால் பொதுமக்கள் அதிர்ச்சி

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கள்ளிவேளிபட்டி ஊராட்சி, கம்மாபட்டியை சேர்ந்தவர் கர்ணன். இவரது மகன் பொன்மணி (25). தனியார் மில்லில் வேலை பார்க்கிறார். இவருக்கு திருமணமாகி 1 வருடம் ஆகிறது. இந்த நிலையில் தனது வீட்டின் அருகே உள்ள சாலையில் நேற்று இரவு கழுத்து அறுபட்ட நிலையில் முகத்தில் காயங்களுடன் பொண்மணி சடலமாக கிடந்தார். அவ்வழியாக சென்றவர்கள் பொன்மணி சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக அலங்காநல்லூர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடம் விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் தலைமையிலான போலீசார் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சமயநல்லூர் சரக டிஎஸ்பி பாலசுந்தரம் சம்பவ இடம் விரைந்து பார்வையிட்டு கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினார். மேலும் சம்பவ இடத்திற்கு தடையவியல் நிபுணர்களும், மோப்பநாயிம் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. முன்விரோதம் காரணமா? இல்லை வேறு ஏதும் பிரச்சனையா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை தீவிர படுத்தியுள்ளனர்.

     திருமணமாகி ஒரு வருடத்திலேயே புது மாப்பிள்ளை கொலை செய்யப்பட்ட சம்பவம் அலங்காநல்லூர் பகுதியில் பொதுமக்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது மேலும் தொடர்ந்து நடைபெற்று வரும் கொலை சம்பவங்களால் அலங்காநல்லூர் பகுதியில் பொதுமக்கள் இடையே பீதியை உருவாக்கியுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    .செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad