Header Ads

  • சற்று முன்

    95 சதம் முடிந்த மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை தேடி அலைந்த விருதுநகர் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்கள்


    மதுரை மக்களுக்கே மல்லிகை பூ சுற்றிய பாஜகவினர் என மாணிக்கம் தாகூர் M.P. வெங்கடேசன் MP பேட்டி மதுரை மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை பணி 95% முடிந்துவிட்டது என்று ஒரு பொய்யான  பரப்புரையை பாஜக அகில இந்திய தலைவர் நட்டா கூறியது பெரிய அதிர்ச்சியாக உள்ளது . ஒரே வாரத்தில் எப்படி கட்டிமுடித்துள்ளனர் என பார்த்துவிடாம் இந்த இடத்தில்   இருந்த போர்டை காணம்'' செங்கல் ஒரே ஒரு கல் இருந்தது. அதுவும் இல்லை.


    ஆனால் ஜெய்கா புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுவிட்டாச்சு ஜப்பான் நிறுவனம் கடன் ஒதுக்கீடு செய்துவிட்டது  ஆனால் கடந்த ஆண்டு March மாதம் உயர்த்தப்பட்ட தொகைக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் தரவில்லை.  எனவே கபினேட் வைத்து உயர்த்தபட்ட தொகைக்கு ஒப்புதல வழங்க வேண்டும் தமிழக அரசு போதுமான நிலத்த ஒப்படைத் விட்டது. பொய் சொல்வது முழு நேர வேலையாக வைத்துள்ளனர் BJPயினர். ஒரு பைசா ஒதுக்கிடு செய்யாமல் மதுரை விமான நிலையத்திற்கு 540 கோடி ஒதுக்கீடு செய்தாக பொய் கூறியுள்ளார் . நிதி ஒதுக்கீட்டிற்கான அரசு ஆணைய ஒன்றிய அரசு தரமுடியுமா என மதுரை M.P வெங்கடேசன் கூறினார். விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கூறுகையில்'முன்னாள் சுகாதர அமைச்சர் JP நாட்ட முழு பூசணிக்காய் மறைக்கும் வேலையாய் எய்ம்ஸ் 95 % சத வேலை முடிந்தள்ளது -

    வடிவேல் கதை போல் கிணறை காணவில்லை என்பது போல் நட்டா கட்டிய 95% கட்டிடத்தை காணவில்லை அதை தேடி கண்டு பிடிக்க வந்தோம். மதுரை விமான நிலையத்திற்கு 540 கோடியில நிதி ஒதுக்கிடு செய்யப்பட து என கூறியுள்ளார். தமிழக மக்களை தொடர்ந்து பாஜக ஏமாற்றி வருகிறது.

    எய்ம்ஸ் பொறுத்தவரையில் பாஜக பொய்யான தகவல் பரப்புகிறது. 23 எய்மஸ் மமருத்துவமனைகளில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மட்டுமே ஜப்பானிடம் புரிந்துணர்வு செய்து ஜெயிக்கா நிறுவனத்திடம் நிதி பெற்று நடத்துகிறது மற்ற நிதி மற்ற எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு அரசின் பொது நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்து கட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வெறும் 200 கோடி ரூபாய் மட்டுமே செலவு செய்கிறது .

     86 சதவீத நிதி ஜப்பானின் ஜெயிக்கா நிறுவனம் தான் ஒதுக்கீடு செய்கிறது அதற்கான ஒப்புதல் வழங்கியும் ஒன்றிய அரசு கேபினர் கூட்டத்தில் அதை அமல்படுத்தி வேலை தூங்குவதற்கான டெண்டர் விடப்பட வேண்டும் இதற்கான பணிகளை இதுவரை ஒன்றிய அரசு செய்யவில்லை. பாஜகவினர் மதுரை மக்களுக்கு மல்லிகை பூ சுற்றுகின்றனர்.  அண்ணாமலை முழு பூசணி சோற்றில் மறைகிறார். 90% சதம் ஜப்பான் செய்கிறது. இதில் ஒன்றிய அரசு செய்ய வேண்டிய வேலை மாநில அரசு இடத்தை ஒதுக்கி தருவது மட்டுமே. 22 எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒன்றிய அரசு நிதி வழங்க வேண்டும்.

    மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி ஒன்றிய அரசு தான் செய்ய வேண்டும் இதே போல் மதுரை விமான நிலையத்திற்கு 540. கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. எனக் கூறுவது மதுரை மக்களை ஏமற்று கின்ற வஞ்சிக்கின்ற செயல் என விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், மதுரை நாடாளுமன்ற  த.வெங்க டேசன் கூறினர்.செய்தியாளர் 

    வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad