சுதந்திரப் போராட்ட வீரர் வ உ சி சிதம்பனார் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
சுதந்திரப் போராட்ட வீரர் வ உ சி சிதம்பனார் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டியில் அதிமுக வடக்கு மாவட்ட சார்பில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
சுதந்திரப் போராட்ட வீரர் வ உ சி சிதம்பனார் 150 வது பிறந்த நாளை விழா வரும் 5 ம் தேதி திங்கட்கிழமை அன்று நடைபெற உள்ளது.பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அதிமுக வடக்கு மாவட்ட சார்பில் கோவில்பட்டி சட்டமன்ற அலுவலகத்தில் வைத்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தலைமையில் வ உ சி சிதம்பரனார் பிறந்தநாள் விழாவிற்கு அதிமுக வடக்கு மாவட்ட சார்பில் ஓட்டப்பிடத்தில் அமைந்துள்ள சுதந்திரப் போராட்ட வீரர் வ உ சி சிதம்பனார் இல்லத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துள்ளனர்.இக்கூட்டத்துக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சின்னப்பன், மோகன், நகரச் செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் காந்தி என்ற காமாட்சி, அன்புராஜ், வண்டானம் கருப்பசாமி, கருங்குளம் ஒன்றிய செயலாளர் லட்சுமண பெருமாள், நகர மன்ற உறுப்பினர் கவியரசன், ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் நீலகண்டன், எட்டையாபுரம் நகர செயலாளர் ராஜகுமார்,மேல ஈரால் கிளைச் செயலாளர் பொன்ராஜ், கடம்பூர் எம்ஜிஆர் மன்றம் இளைஞரணி செயலாளர் விஜி, கருங்குளம் எம்ஜிஆர் மன்றம் ஒன்றிய செயலாளர் பரமசிவம், உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கடம்பூர் மாயா துரை, கோபி, முருகன், பழனி குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை