Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டி அருகே ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிப் படுகொலை


     தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி  அருகே திட்டங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பொன்ராஜ்(63)இவர் தெற்குத் திட்டங்குளம் காலனி பகுதியில் உள்ள பண்ணை தோட்டத்தில் இருந்த போது அங்கு வந்த மர்மநபர்கள்  பொன்ராஜ்  சரமாரியாக வெட்டி கொலை செய்து  விட்டு தப்பிச் சென்றனர். தகவல் அறிந்த கிராம மக்கள் போலீசருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து சம்பவத்திற்கு இடத்திற்கு வந்த கிழக்கு காவல் நிலைய போலீசார் சடலத்தை 

    கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து  தப்பியோடிய மர்ம நபர்களை  காவல்துறையினர் தேடி வருகின்றனர்  மேலும் அப்பகுதியில் உறவினர்கள் பொதுமக்கள் அதிக அளவில் கூடியதால் பரபரப்பு நிலவி வருகிறது.மேலும் அவரது உடல் வைக்கப்பட்டுள்ள கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் உறவினர்கள் குவிந்துள்ளதால் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad