இருண்டு காணப்படும் மதுரை டிவிஎஸ் நகர் பாலம் உயிர் பயத்தில் வாகன ஓட்டிகள்
மதுரை டிவிஎஸ் நகர் பாலம் கட்டி 15 ஆண்டுகள் கடந்தும் இன்று வரை முறையாக பாலத்தில் விளக்குகள் அமைக்காமல் அவல நிலை தொடர்கின்றது இதனால் சில சமூக விரோதிகள் பாலத்தின் மேல் நின்று அந்த பக்கம் இரு சக்கர வாகனத்தில் செல்வர்களிடம் போன் மற்றும் பணத்தை பறித்து செல்கின்றனர் விளக்குகள் இல்லாததால் இன்று வரை கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்பட்டோர் பாலத்தின் மேலிருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளனர் இதனை உடனே மாவட்ட ஆட்சியர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிவிஎஸ் நகர் பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
கருத்துகள் இல்லை