Header Ads

  • சற்று முன்

    தூத்துக்குடி அருகே கார் டயர் வெடித்து விபத்து இரண்டு பேர் பலி ஒரே குடும்பத்தை சேர்ந்த 8-பேர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை-க்கு அனுமதி.

    சாத்தூர் பகுதியை சேர்ந்த பழனிச்சாமி, சங்கரேஸ்வரி பிள்ளைகள் பிரபா, சங்கர், இதில் பிரபா-வை திருச்செந்தூரில் திருமணம் செய்து கொடுத்து அவர் 8-மாத கர்பிணியாக உள்ளார். இந்நிலையில் திருச்செந்தூரில் இன்று பிரபா-வுக்கு நடைபெறும் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சாத்தூரில் இருந்து காரில்  பழனிச்சாமி, சங்கரேஸ்வரி, மகன் சங்கர் உட்பட மொத்தம் 11-பேர் புறப்பட்டு சென்று கொண்டிருந்த-போது தூத்துக்குடி குறுக்குசாலை அருகே வரும் போது  கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானது. 

    இந்த எதிர்பாரத சம்பவத்தில் பிரபா தாய்  சங்கரேஸ்வரி, உறவினரான ஆசிரியர் மருதாயி, ஆகிய இரண்டு பேர் சம்பவ இடத்திலே பலியாகினர்  மேலும் 3-சிறுவர்,சிறுமி உட்பட 8-பேர் காயங்களுடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்  இதில் காரை ஓட்டி வந்த பழனிச்சாமி மகன் சங்கர் தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடிய நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.இந்த சம்பவம் தொடர்பாக ஓட்டப்பிடாரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    தூத்துக்குடி அருகே விசேச வீட்டுக்கு சென்ற  இடத்தில் கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில்  ஒரே குடும்பத்தினை சேர்ந்த இரண்டு பேர் உயிரிழந்து 8-பேர் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.                                                                                                                                                                         குறுக்குசாலை அருகே ஏற்பட்ட விபத்தில் 2பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்த நிலையில் வாகனத்தை ஓட்டி வந்த சங்கர் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்  உயிருக்கு போராடிய நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்தோரின் எண்ணிக்கை மூன்றாக உயர்வு

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad