கோவில்பட்டியில் புதிதாக 5 கே கார் சர்வீஸ் சென்டர் திறப்புவிழா கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு கார் சர்வீஸ் சென்டர் திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் புதிதாக தொடங்கப்பட்ட 5 கே கார் சர்வீஸ் சென்டர் திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு 5 கே கார் சர்வீஸ் சென்டரை ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏத்தி திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில் நிசான் கார் டீலர் சுந்தர், 5 கே கார் சர்வீஸ் சென்டர் உரிமையாளர் டாக்டர் கார்த்திக் குமார், சின்னராஜ், ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், நகரமன்ற உறுப்பினர் கவியரசன், மேலஈரால் கிளைச் செயலாளர் பொன்ராஜ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், அதிமுக நிர்வாகிகள் முருகன்,பழனி குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை