Header Ads

  • சற்று முன்

    திருவாடனை வட்டாசியர் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம்

    திருவாடானை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின்  வட்டக்கிளை சார்பில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி   வட்டத்தலைவர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் திருவாடானை வட்டக்கிளை சார்பில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வட்டத்தலைவர் சுரேஷ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் முருகேஸ்வரி, மாவட்ட துணைத் தலைவர் செந்தில்வேல் முருகன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். முடிவில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் வட்டக்கிளை நிர்வாகி அமுதன் நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் துணை வட்டாட்சியர்கள் ஜஸ்டின் பெர்னாண்டோ, கருப்பையா, வருவாய் ஆய்வாளர் மெய்யப்பன் உள்ளிட்ட வருவாய்த்துறை அலுவலர்கள், நில அளவர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் உள்ளிட்டு அனைத்து துறை அலுவலர்கள்  10 பெண்கள் உட்பட 50 க்கும் மேற்பட்டோர்  கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி அனைவரும் கோஷங்களை எழுப்பினர்.

    திருவாடனை செய்தியாளர் 

    L.V. ஆனந்தன்





    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad