திருப்பத்தூர் அருகே மைனர் பெண்ணை கடத்திச் சென்றதாக கூறி தந்தை கொடுத்த புகாரின் பேரில் வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த வரதராஜர் கோயில் தெருவில் வசிப்பவர் அஜிஸ் மகன் உஸ்மான் (25) இவர் அதே பகுதியில் வசித்து வந்த 14 வயது மட்டுமே நிரம்பிய சிறுமியை காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 10ஆம் தேதி சிறுமியின் தந்தை தன்னுடைய மகளை காணவில்லை என்வும் உஸ்மான் தன் மகளை கடத்தி சென்றதாகவும். திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் அடிப்படையில் பல்வேறு இடங்களில் உஸ்மானை தேடி வந்தனர் திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையம் அருகே தனியாக நின்று கொண்டிருந்த உஸ்மானை மகளிர் காவல் துறை மடக்கிப் பிடித்து விசாரித்ததில் திருப்பத்தூர் பகுதியிலேயே வீடு வாடகைக்கு எடுத்து சிறுமியுடன் வாழ்ந்து வந்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து 14 வயது சிறுமியை கடத்திச் சென்றதாக உஸ்மான் மீது போக்கை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும் மகளிர் காவல் துறை சிறுமியை மீட்டு சிறுவர் சிறார் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை