Header Ads

  • சற்று முன்

    முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ சமூகநல கூடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.



    கோவில்பட்டி அருகே சட்டமன்ற மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 54 லட்சம் மதிப்பிலான கட்டி முடிந்த திட்டப்பணிகளை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இராஜாபுதுக்குடி கிராமத்தில் சட்டமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 33 லட்சம் மதிப்பிலான சமூகநல கூடத்தை முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து  கயத்தாறு அருகே உள்ள தெற்கு சுப்ரமணியபுரத்தில் சட்டமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான அங்கன்வாடி மையம்,வடக்கு சுப்ரமணியபுரத்தில் சட்டமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 11 லட்சம் மதிப்பிலான அங்கன்வாடி மையம் உள்ளிட்ட பணிகளை முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலாளர்கள் வண்டானம் கருப்பசாமி, வினோபாஜி, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் செல்வகுமார், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் நீலகண்டன், ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகச்சாமி, மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ், ஒன்றிய கவுன்சிலர் கிரிதர், மாணவர் அணி இணைச் செயலாளர் நவநீதகிருஷ்ணன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் காளிபாண்டி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், மற்றும் அதிமுக நிர்வாகிகள் கடம்பூர் பாலமுருகன் என்ற விஜி,கடம்பூர் மாயாதுரை, முருகன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    செய்தியாளர் : சிவராமலிங்கம் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad