இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சென்னை தண்டையார்பேட்டை தோழர் ஜீவா சிலை அருகே மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது
72வது குடியரசு தினவிழா ஊர்வலத்தில் சுதந்திர போராட்ட வீரா்கள் வேலுநாச்சியார்,பாரதி,வ.உ.சி படங்களுங்கு அனுமதி மறுத்திடும் ஒன்றிய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சென்னை தண்டையார்பேட்டை தோழர் ஜீவா சிலை அருகே மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. வடசென்னை மாவட்ட செயலாளர் எம்.எஸ்.மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் மாநில நிர்வக குழு எஸ்.ஏழுமலை,மாவட்ட செயலாளர் பா.கருநாநிதி,மாவட்ட துனை செயலாளர் எம்.வசந்தகுமார்,ஏ.ஒய்.எப்.தலைவர் டி.கே.வெங்கடேஷ்,மாவட்ட நிர்வாககுழு எல்.குப்பன்,மகளிர் அணி செயலாளர் ரேனுகாதேவி,பெரம்பூர் செயலாளர் ஏ.சுப்ரமணி,பகுதிசெயலாளர் ஜெய்சங்கர்,மூ.ராமசந்திரன் மற்றும் இந்திய கம்யூணிஸ்ட் கட்சியின் தோழர்கள் பலர் கண்டன தெரிவித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காணொளி காட்சியினை nms today youtube சேனலில் காணலாம்
கருத்துகள் இல்லை