Header Ads

  • சற்று முன்

    தோழர் ஜீவாவின் 59வது நினைவுதினத்தை முன்னிட்டு மூத்த தோழர் இரா.நல்லகண்ணு மலர் மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தினார்.


    தோழர் ஜீவாவின் 59வது நினைவுதினத்தை முன்னிட்டு சென்னை காசிமேட்டில் உள்ள தோழர் ஜீவா நினைவிடத்தில் விடுதலை போராட்ட வீரர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் இரா.நல்லகண்ணு  மலர் மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தினார்.

    இதனையடுத்து சென்னை தண்டையார்பேட்டை ஜீவா பூங்காவில் உள்ள தோழர் ஜீவா சிலைக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் இரா.நல்லகண்ணு  மாலை அணிவித்து உறுதியேற்பு நிகழ்வு தொடங்கிவைத்தார். 

    இதில் வடசென்னை மாவட்ட செயலாளர் எம்.எஸ்.மூர்த்தி,மாநில நிர்வக குழு எஸ்.ஏழுமலை,மாவட்ட செயலாளர் பா.கருநாநிதி,மாவட்ட துனை செயலாளர் எம்.வசந்தகுமார்,ஏ.ஒய்.எப்.தலைவர் டி.கே.வெங்கடேஷ்,மாவட்ட நிர்வாககுழு எல்.குப்பன்,மகளிர் அணி செயலாளர் ரேனுகாதேவி,பெரம்பூர் செயலாளர் ஏ.சுப்ரமணி,பகுதிசெயலாளர் ஜெய்சங்கர்,மூ.ராமசந்திரன் மற்றும் இந்திய கம்யூணிஸ்ட் கட்சியின் தோழர்கள் பலர் கலந்துகொண்டு வீரவணக்கம் செலுத்தினர்.


    இதன் காணொளி காட்சியினை nms today youtube சேனலில் காணலாம் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad