Header Ads

  • சற்று முன்

    தம்பதிகளுக்கிடையே வாய் சண்டை கொலையில் முடிந்தது

    சென்னை புரசைவாக்கம் வெள்ளாளர் தெருவில் வினோத் குமார் வயது (34) ஹேமாவதி  வயது (24) என்கிற தம்பதிகள் வசித்து வந்தனர். இவர்களுக்கு 5 வயது பெண் குழந்தை உள்ளது.வினோத் குமார் கொளத்தூர் தனியார் நிறுவனத்தில் விளம்பர பிரிவில் பணிபுரிந்து வந்தார். இந்த தம்பதிகளுக்குக்கிடையே அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவகாரத்திற்காக விண்ணப்பித்திருந்தனர். இவர்களது பெற்றோர்கள் சமாதானம் செய்து மீண்டும் சேர்த்து வைத்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஹேமாவதி மழை நீரில் வழுக்கி விழுந்து விட்டதாக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார் வினோத் குமார். அப்போது மருத்துவர்கள் பரிசோதித்து இறந்துவிட்டதாக தெரிவித்தார். தகவல் அறிந்த ஹேமாவதி பெற்றோர் கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் வினோத் குமார் மீது புகார் அளித்தனர்.புகாரின் அடிப்படையில் போலீசார் வினோத்குமாரை விசாரித்தபோது என்னை என் உறவுக்கார பெண்ணுடன் தொடர்ப்பு படுத்தி பேசியதால் ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்து அவளின் கழுத்தை நெரித்து தள்ளினேன் என்று விசாரணையில் கூறினார். பின்னர் காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். 

    பெற்றோர்கள் சண்டையில் பச்சிளங் குழந்தை அனாதையாக நின்றதை பார்த்த அப் பகுதிமக்கள் சோகத்தில் முழுக்கிருந்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad