Header Ads

  • சற்று முன்

    அதிமுக உட்கட்சி தேர்தல் விருப்ப மனு

    தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் நடைபெற உள்ள அதிமுக உட்கட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கு விண்ணப்பங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

    அதிமுக உள்கட்சி தேர்தல் வரும் 22. 23-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. அதற்குரிய விண்ணப்ப படிவங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்து வருகிறது.

    தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கோவில்பட்டி இனம்மணியாச்சியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் உட்கட்சி தேர்தலில் போட்டியிட விண்ணப்ப படிவங்களை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சரும் அதிமுக வடக்கு மாவட்டச் செயலாளருமான கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ தலைமையில்,விண்ணப்ப படிவங்களை விண்ணப்ப படிவங்களை வழங்கினார்.

    கோவில்பட்டி. ஓட்டப்பிடாரம், எட்டயபுரம், விளாத்திகுளம், கடம்பூர், கயத்தாறு, கழுகுமலை ஆகிய பகுதிகளை சேர்ந்த அதிமுக கட்சியினர் உட்கட்சி தேர்தலில் போட்டியிட விண்ணப்ப படிவங்களை பெற்றனர். 

    இதற்கு முன்னதாக,அமமுக கட்சியே சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ முன்னணியில் அமமுகவினர் கட்சி இருந்து விலகி தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சின்னப்பன், மோகன், நகரச் செயலாளர் விஜய பாண்டியன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிச்சாமி, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் செல்வகுமார், ஒன்றிய செயலாளர்கள் அன்புராஜ், அய்யாதுரை பாண்டியன், அம்மா பேரவை நகர தலைவர் வேலுமணி, அம்மா பேரவை நகர செயலாளர் ஆபிராம் அய்யாத்துரை, ஆவின் பால் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் சிவபெருமாள், அமைப்பு  சாரா ஓட்டுனர் அணி மாவட்ட இணைச்செயலாளர் செண்பக மூர்த்தி, மாவட்ட மாணவரணி துணை தலைவர் செல்வராஜ், மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் சுதா என்கிற சுப்புலட்சுமி, ஒன்றிய செயலாளர்கள் வினோபாஜி, வடக்கு வண்டானம் கருப்பசாமி, முத்துராஜ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், முன்னாள் கவுன்சிலர்கள் ரவி, ஜெமினி என்ற அருணாச்சலம், கழகப் பேச்சாளர் பெருமாள்சாமி உள்பட அனைவரும் விண்ணப்ப படிவங்களை வாங்கிச் சென்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad