சென்னையில் பிரபல ஸ்டோரேஸ்களில் வருமானவரி துறை அதிகாரிகள் அதிரடி சோதனை
சென்னையில் உள்ள சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான கடைகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகிறார்கள். புரசைவாக்கம், தி நகர், போரூர், குரோம்பேட்டை ஆகிய பகுதிகளில் இயங்கிவரும் சூப்பர் சரவணா ஸ்டோர்களில் அதிரடி சோதனை நடைபெற்றுகிறது.
இந்த நிறுவனம் 1969 ஆம் ஆண்டு கட்டப்பட்டு படிப்படியாக தமிழகம் முழுவதும் விஸ்தரித்து உள்ளது. இந்த நிறுவனம் மதுரை, திருநெல்வேலி, கோவை உள்ளிட்ட இடங்களிலும் தொடங்கப்பட்டுள்ளது. நிறுவனம் மெல்ல வளர்ந்து தற்போது மும்பை, டெல்லி, பெங்களூரிலும் தொடங்குவதற்கு ஆயத்தமாகி வருகிறது. 5 மாடிகளுக்கு மேல் கொண்டுள்ள இந்த கடையில் குண்டூசி முதல் குண்டுமணி நகை வரை அனைத்தும் கிடைக்கும். தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் கடைகளில் லட்சக்கணக்கானோர் வருகை தருவர். அது போல் சனி, ஞாயிறுகளிலும் கட்டுக்கடங்காத கூட்டம் வரும்.
இந்த கடையில் நுழைந்துவிட்டால் போதும் திருமணம், புது வீடு உள்ளிட்டவைகளுக்கு தேவையான அனைத்தையும் வாங்கிவிடலாம். விலையும் சற்று குறைவாக இருக்கும் என்பதால் இங்கு மக்கள் குழுமுகிறார்கள். இந்த கடையை போல் லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ், சரவணா செல்வரத்னம் ஆகியவை உள்ளன. இவற்றை சகோதரர்களின் குடும்பத்தினர் நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் இந்த சூப்பர் சரவணா ஸ்டோர்ஸின் சென்னை கிளைகளில் வருமான வரித் துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகிறார்கள். காலையில் உள்ளே சென்ற அதிகாரிகள் இன்னும் வெளியே வரவில்லை.
கருத்துகள் இல்லை