தந்தை பெரியாரின் 48வது நினைவு தினம். திருவண்ணாமலையில் அமைச்சர் எ .வ. வேலு மாலை அணிவித்தார்
திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை நகரத்தில் இன்று பகுத்தறிவு பகலவன் என ஏழை எளிய மக்களால் போற்றப்படும் அய்யா தந்தை பெரியார் என எல்லோராலும் அழைக்கப்படும். ஈ.வெ.இராமசாமி அவர்களின் 48வது நினைவு தினமான இன்று 24.12.2021 பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் மாண்புமிகு அய்யா எ.வ.வேலு.MLA அவர்களின் தலைமையில் தந்தை பெரியார் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்...
மேலும் அவருடன் தமிழகத்தின் துணை சபாநாயகரும் கீழ்பெண்ணாத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திரு கு. பிச்சாண்டி MLA மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மருத்துவ அணியின் துணைத்தலைவர் திரு எ.வ.வே.கம்பன் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட திமுகவின் நகரச் செயலாளர் திரு பா. கார்த்திக் வேல்மாறன் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட கலை இலக்கிய பேரவைத் தலைவர் T.V.M. நேரு மற்றும் 23வது வார்டு வட்டப் பிரதிநிதி அ. தினேஷ் BA ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும் திருவண்ணாமலை மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னோடிகள் பலர் திரளாக கலந்துகொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்ட நம் மக்களின் சப்தம் செய்திகளுக்காக வினோத் மற்றும் மதன்குமார்
கருத்துகள் இல்லை