Header Ads

  • சற்று முன்

    திருப்பத்தூரில் ஒன்றரை வயது பெண் குழந்தையை விட்டு விட்டு தூக்கில் தொங்கிய காவியா

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஜெய மாதா நகரில் வசித்து வரும் ராஜகுமார் வயது 43 இவர்களது மகள் காவியா வயது 21 இரண்டு வருடங்களுக்கு முன்பு காவியாவும் திலிப் குமார் வயது 29 இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஹன்சிகா ஸ்ரீ என்ற பெண் பிள்ளை உள்ளது மேலும் காவியா ஆறு மாத கர்ப்பிணியாக உள்ளார் எனவே இவரது கணவர் திலீப்குமார் அடிக்கடி குடித்துவிட்டு அவரது மனைவியைக் கொடுமைப்படுத்தி வந்த நிலையில் 21.6.2021 ஆம் தேதி இரவு 10.30 மணி அளவில் திலீப்குமார் அவரது மனைவியிடம் குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டதாகவும் அதன் பின்னர் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது அதன் பின்னர் காவியா தூக்கில் தொங்கி இறந்தார் என்ற செய்தி வந்தது. இதனால் காவியாவின் குடும்பத்தினர் மரணத்தில் மர்மம் உள்ளதாக ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர் எனவே இந்த மனுவை ஜோலார்பேட்டை காவல் உயர் அதிகாரிகள் இதை குறித்து விசாரித்து வருகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad