தண்டையார்பேட்டையில் கொரோனா தடுப்பூசி முகாம்
சென்னை தண்டையார்பேட்டை தாண்டவராயன் தெரு,தண்டையார்பைட்டை மார்கெட், கும்மாளம்மன் கோயில் தெரு வார்டு 42,43க்குட்பட்ட பகுதியில் ஆரம்ப சுகாதாரமையம் சார்பாக சென்னை மாநகராட்சி நடுநிலை பள்ளி வளாகத்தில் கோவிட்19 தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை நடைபெற்ற இந்த முகாமில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 முதல் 59 வயதுக்குட்பட்ட இணை நோய் உள்ள பொதுமக்கள்,வியாபாரிகள் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் முதற்க்கொண்டு ஆசிரியர்கள் வரை தடுப்பூசி போட்டுகொண்டனர். தடுப்பூசி போட்டுகொண்ட நபர் அடுத்த அரைமணி நேரம் மருத்துவர் கண்காணிப்பில் இருக்கவேண்டும் எனவும்.முகாமுக்கு வருபவர்கள் ஏதேனும் ஒரு அடையாள அட்டையை கொண்டுவர வேண்டும் எனவும்.பொதுமக்கள், முன்களப்பணியாளர்கள் உள்ளிட்டோர் இந்த முகாமில் கலந்து கொண்டு பயண்பெற்றனர்.
இதனை தொடர்ந்து அப்பகுதி வியாபரிகளுக்கு கொரோனா பரிசோதனைக்கு மாதிரிகளும் எடுக்கபட்டது.
கருத்துகள் இல்லை