Header Ads

  • சற்று முன்

    10ரூபாய் டாக்டர் மருத்துவமாமணி எஸ்.கோபாலன் மறைவுக்கு புகழஞ்சலி செலுத்தபட்டது.


    10ரூபாய் மருத்துவர் டாக்டர் எஸ்.கோபாலன் அவர்களுக்கு சென்னை பழைய வண்ணாரப்பேட்டை  தபால் நிலையம் அருகே உள்ள அருள்ஜோதி நடுநிலைபள்ளி வளாகத்தில் ராயபுரம் ரவுண்டப் சார்பில் தடுப்பூசிமுகாம் மற்றும் பத்து ரூபாய் மருத்துவர் டாக்டர் எஸ்.கோபாலன் படத்திறப்பு நிகழ்வு நடைபெற்றது.

    இந்நிகழ்வு வடசென்னை வியாபாரிகள் சங்க தலைவர் ஜி.ராபர்ட் தலைமையிலும் முன்னால் மாமன்ற உறுப்பினர் எம்.கே.பாபுசுந்தரம் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தடுப்பூசி முகாமினை வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சுப்புலட்சுமி துவக்கிவைத்தும் மருத்துவர் எஸ்.கோபாலின் படத்தை எழுத்தாளர் லதா சரவணன் திறந்துவைத்தார்.

    இந்நிகழ்வில் மருத்துவர் நந்திவர்மன்,   தலைமை ஆசிரியை மணிமேகலை,  முன்னாள் மாமன்ற உறுப்பினர்  சி.பி.ராமஜெயம்,எல் முருகவேலு,எழுத்தாளர் சிவசுப்ரமணியம், எஸ்.எஸ் ஜெயமோகன் , செ.யூஜின்,முனைவர் சுந்தர்,அண்ணா நடப்போர் நலச்சங்கத்தின் செயலாளர் பூங்கா குணசேகரன்,ஸ்டார் கம்யூனிகேஷன் ரபியா, ரோலி மார்ட்டீன் ஆகியோர் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad