Header Ads

  • சற்று முன்

    சென்னை ராயப்பேட்‌டை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நடைபெற்ற மாபெரும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தேர்தல் அறிக்கையை, திரு. டிடிவி தினகரன் வெளியிட்டார்.

     தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்‍கான, அம்மா மக்‍கள் முன்னேற்றக் கழக தேர்தல் அறிக்‍கை, சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் வெளியிட்டார்.


    சென்னை ராயப்பேட்‌டை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நடைபெற்ற மாபெரும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தேர்தல் அறிக்கையை, திரு. டிடிவி தினகரன் வெளியிட்டார். இக்கூட்டத்தில், அகில இந்திய மஜ்லிஸ் இத்தி ஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் நிறுவனர் திரு. பாரிஸ்டர் அசத்துதின் உவைசி, எஸ்.டி.பி.ஐ., மருதுசேனை ச‍ங்கம், கோகுல மக்கள் கட்சி, விடுதலை தமிழ் புலிகள் கட்சி, மக்களரசு கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் பெருந்திரளாக பங்கேற்றனர்.

    கூட்டத்தில் அமமுகவின் தேர்தல் பிரச்சார குறுந்தகடை, திரு. டிடிவி தினகரன் வெளியிட்டார். இதனைத்தொடர்ந்து, தேர்தல் அறிக்‍கையில் இடம் பெற்றுள்ள, தமிழக வளர்ச்சிக்‍கான சிறப்பு அம்சங்களை, அலைகடலென திரண்டிருந்த பொதுமக்‍கள் மத்தியில் அறிவித்து திரு. டிடிவி தினகரன் சிறப்புரை ஆற்றினார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad