தமிழக அரசியல் வரலாற்றில் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட மாற்றுத்திறனாளி ஒருவருக்கு வாய்ப்பளித்துள்ளது பகுஜன் சமாஜ் கட்சி
செங்கல்பட்டு மாவட்டம் சென்னை பல்லாவரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் மாற்றுத்திறனாளி கார்த்திக் என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.தமிழக தேர்தல் வரலாற்றில் மாற்றுத்திறனாளி ஒருவர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதல் முறையாகும். தமிழகத்தில் இதுவரை வேறு எந்தக் அரசியல் கட்சியும் மாற்றுத்திறனாளிக்கு வாய்ப்பளிக்காதபோது பகுஜன் சமாஜ் கட்சி வாய்ப்பளித்ததை சமூக ஆர்வலர்கள், மாற்று திறனாளிகள் வரவேற்று பகுஜன் சமாஜ் கட்சியினை பாராட்டி உள்ளனர்.
பல்லாவரம் தொகுதி செய்தியாளர் ராஜ்கமல்
கருத்துகள் இல்லை