திருப்பத்தூர் அருகே தனியாருக்கு சொந்தமான நார் தொழிற்சாலையில் தீ விபத்து! லாரி உட்பட 10 லட்சம் பொருட்கள் சேதம்!
திருப்பத்தூர் மாவட்டம் அனேரி பகுதியில் உள்ள தென்றல் நகரில் திருப்பதி என்பவருக்கு சொந்தமான தேங்காய் நாரில் கயிறு தயாரிக்கும் தொழிற்சாலை சுமார் 5 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் சுமார் 20 கும் மேற்ப்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர் இந்நிலையில் தேங்காய் நார் தொழிற்சாலையில் திடீர் என்று தீப்பற்றி எரிந்தது தொழிலாளர்கள் தீயை அணைக்க முற்படுவதற்குள் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது தீ பற்றி மளமளவென எரிந்தது சேதமானது.
இச்சம்பவம் குறித்து தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பொருள்கள் எரிந்து சேதமானது.
இச்சம்பவம் குறித்து திருப்பத்தூர் கிராமிய போலீஸார் மின்கசிவு காரணமாக தீ பற்றி எரிந்தது அல்லது வேறு ஏதாவது சமூக விரோதிகளின் செயலா என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
கருத்துகள் இல்லை