Header Ads

  • சற்று முன்

    செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தேமுதிக சார்பில் பெட்ரோல் விலை ஏற்றத்தை கட்டுபடுத்தாத மத்திய, மாநில அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

    சென்னை அடுத்த பல்லாவரம் அம்பேத்கர் சிலை அருகே செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளர் அனகை முருகேசன் தலைமையில் பெட்ரோல் விலை ஏற்றத்தை கட்டுபடுத்தாத மத்திய, மாநில அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில இளைஞரணி செயலாளர் நல்ல தம்பி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் பேசிய நல்லதம்பி மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல் விலையை நாளுக்கு நாள் விலை ஏற்றம் செய்யவதாகவும், பெட்ரோல் விலையை ஜி.எஸ்.டி வரியின் வரம்பிற்க்குள் கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தினார், மேலும்  எரிபொருள் ஏற்றத்தால் பாமரமக்கள் பெரிதும் பாதிப்புகுள்ளாகி உள்ளன. இதில் பெண்கள் கேஸ் விலை ஏற்றத்தால் அன்றாட வாழ்வாதரத்தின் நிலை மிகுந்த பாதிப்பு அடைகிறது என மத்திய, மாநில அரசுகள் இதனை கருத்தில் கொண்டு விலை உயர்வை கட்டுபடுத்த வலியுறுத்தி, கையில் கண்டன வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி கண்டன கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில். இதில் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மகளிரணியினர் உட்பட 1000 த்திற்க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    பல்லாவரம் தொகுதி செய்தியாளர் ராஜ்கமல்


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad