பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் பல்லாவரத்தில் ஆர்ப்பாட்டம்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி செங்கல்பட்டு மாவட்டம் சென்னை பல்லாவரம் பேருந்து நிலையம் அருகில் இந்திய தேசிய லீக் கட்சியின் மாவட்ட தலைவர் ஒய்.எஸ் ரஹ்மதுல்லா தலைமையில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மனிதாபிமான அடிப்படையில் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கோஷமிட்டனர். இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அன்சாரி,ரஜாஸ்,அஜீஸ்,இம்ரான் காதர்பாபு,இதயதுல்லா மற்றும் மாற்றுக் கட்சியை நிர்வாகிகள் சமூக ஆர்வலர்கள் பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்
கருத்துகள் இல்லை